உள்ளூர் செய்திகள் (District)

செலாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-12-07 04:49 GMT   |   Update On 2022-12-07 04:49 GMT
  • செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இதுசார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தாராபுரம் :

தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 8-ந் தேதி (வியாழக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம் வட்டமலைபுதூர் மற்றும் இதுசார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

Tags:    

Similar News