பல்லடத்தில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
- நள்ளிரவில் மர்ம நபர்களால் மோட்டர் சைக்கிள் திருடப்பட்டது.
- ஒரே நாளில் 2 புதிய மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் :
பல்லடம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(24) இவர் தனியார் நிறுவன ஊழியர். வழக்கம் போல் தனது இவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் மோட்டர் சைக்கிள் திருடப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 1 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே வீதியில் உள்ள திவாகர்(26) என்பவரின் மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டது. ஒரே நாளில் அதே வீதியில் 2 புதிய மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெறாமல் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் மீண்டும் பல்லடம் பகுதியில் தலை தூக்கி உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மோட்டார் சைக்கிள்களை திருடும் மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.