உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

உடுமலையில் கல்லூரி மாணவர்களுக்கு எரிவாயு விழிப்புணர்வு முகாம்

Published On 2023-07-16 10:52 GMT   |   Update On 2023-07-16 10:52 GMT

உடுமலை:

உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தர் சார்பில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியருக்கு எரிவாயு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் கே.கல்யாணி தலைமை வகித்தார். எரிவாயு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் கல்யாணி, செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன் முன்னிலையில் வாசிக்க மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் எரிவாயு சிக்கனம் , எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் சிலிண்டரை எளிதாக பெறுவது குறித்தும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஐந்து கிலோ சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை சுலபமாக பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது. பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் விவேகானந்தன் கலந்துகொண்டு மாணவர்கள் உழவர் பாதுகாப்புத் திட்ட கல்வி உதவித் தொகையை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

எரிவாயு குறித்த வினாடிவினா நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடுமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் வானொலி தங்கவேலு, சமூக ஆர்வலர் விஜயகுமார்,மணி மற்றும் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News