உள்ளூர் செய்திகள் (District)
உடுமலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது
- கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
உடுமலை :
உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உடுமலை மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16ந் தேதி காலை 10 மணி அளவில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என வருவாய் கோட்டாட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.