அவினாசியில் பலத்த மழை வீடு இடிந்து மூதாட்டி உள்பட 3பேர் காயம்
- அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
- பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அவினாசி :
திருப்பூர்மாவட்டம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவினாசியை அடுத்து சேவூர் பாலிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி- கலா தம்பதியினர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்றுஅதிகாலை நேரத்தில் திடீரென அடுத்தடுத்து 2 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் பழனிசாமி மற்றும் கலா ஆகியோர் லேசான காயமடைந்தனர் .கலாவின் தாயார் மாகாளி(வயது 70) மீது சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சேவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.