உள்ளூர் செய்திகள்

ஆபத்தான மின்கம்பம் சரிசெய்யப்பட்ட காட்சி.

மாலைமலர் செய்தி எதிரொலி - பல்லடத்தில் ஆபத்தான மின்கம்பம் அகற்றம்

Published On 2023-09-04 07:41 GMT   |   Update On 2023-09-04 07:41 GMT
  • தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
  • மின் கம்பம் சாயாமல் இருக்க அதன் அருகே தாங்கிப் பிடிக்கும் கம்பம் அமைக்கப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் காந்தி ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் நுழைவாயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல், எந்த நேரமும் விழும் அபாய நிலையில் இருந்தது.அரசு கல்லூரி மற்றும் அதன் அருகிலேயே பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும் அமைந்துள்ளன.

இதனால் தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே மின் கம்பம் சாய்ந்து விடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைப் பார்த்த மின்வாரிய அதிகாரிகள் நேற்று அந்த அபாயம் மின் கம்பத்தை மாற்றி அமைத்தனர்.

மேலும் மின் கம்பம் சாயாமல் இருக்க அதன் அருகே தாங்கிப் பிடிக்கும் கம்பம் அமைக்கப்பட்டது. அபாயம் மின் கம்பத்தை மாற்ற பொதுமக்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News