உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பெண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

Published On 2023-06-04 06:46 GMT   |   Update On 2023-06-04 06:53 GMT
  • குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை.
  • 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி 3 மாத பெண் சிசுவை போட்டுவிட்டு தாயார் சென்று விட்டார்.

குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அந்த பெண் குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு மற்றும் சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த லைப் லைன் டிரஸ்ட், தத்துவள மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News