உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் பழைய இரும்பு கடையில் திருடியவர் கைது
- காங்கயம் போலீசார் நள்ளிரவு திருப்பூா் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
- சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை நிறுத்தி விசாரித்தனா்.
காங்கயம்:
காங்கயம் புலிமாநகா் பகுதியை சோ்ந்தவா் கனகரத்தினம் (வயது 46). இவா் காங்கயம்-திருப்பூா் சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். கனகரத்தினம் இரவு வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.இந்தநிலையில் காங்கயம் போலீசார் நள்ளிரவு திருப்பூா் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு நபா் கையில் சாக்கு மூட்டையுடன் நடந்து வந்துள்ளாா். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை நிறுத்தி விசாரித்தனா்.
விசாரணையில் அவா் கடலூா் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (44) என்பதும், இவா் கனகரத்தினத்தின் கடையில் இருந்து 15 கிலோ இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா்.