உள்ளூர் செய்திகள் (District)

ஆவின் சிறப்பு விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி. 

தீபாவளியையொட்டி ஆவின் சிறப்பு விற்பனை - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-11-07 07:44 GMT   |   Update On 2023-11-07 07:44 GMT
  • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • ஒன்றிய அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 261 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், பொதுமேலாளர்(ஆவின்) சுஜாதா, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குமாரராஜா, துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேஷ், மேலாளர் (விற்பனைப்பிரிவு) சரண்யா, உதவி பொது மேலாளர் மற்றும் ஒன்றிய அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News