உள்ளூர் செய்திகள் (District)

திருப்பூரில் நேற்று மாலை மழை பெய்ததையும், பள்ளி மாணவிகள் மழையில் நனைந்து சென்றதையும் படத்தில் காணலாம்.   

திருப்பூரை குளிர்வித்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2023-03-25 10:35 GMT   |   Update On 2023-03-25 10:35 GMT
  • அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது.
  • மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பூர் :

திருப்பூர் நகரப்பகுதி மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும், கோடை வெயில் வெளுத்து வாங்கியது. அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. இந்நிலையில் மாநிலத்தின் பல இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரப்பகுதி மட்டுமின்றி அவிநாசி, பல்லடம், மங்கலம் என மாவட்டத்தின் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News