உள்ளூர் செய்திகள் (District)

அவினாசியில் 3-ந் தேதி மின்தடை

Published On 2022-12-02 07:00 GMT   |   Update On 2022-12-02 07:00 GMT
  • அவினாசி துணை மின் நிலையத்தில் 3-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

திருப்பூர் :

தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அவினாசி துணை மின் நிலையத்தில் 3-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. எனவேஅன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலி பாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவ பாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி.சாலை, கிழக்கு, மேற்கு வடக்கு ரதவீதிகள், அவினாசி கைகாட்டிபுதூர், சக்திநகர், எஸ்.பி. அப்பேரல், குமரன்காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News