உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் - உடுமலையில் அ.தி.மு.க.வினர் ஆலோசனை

Published On 2022-12-09 05:50 GMT   |   Update On 2022-12-09 10:50 GMT
  • அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
  • ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

உடுமலை : 

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வுக்கு உட்பட்ட தாராபுரம் குண்டடத்தில் வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் மடத்துக்குளம், தாராபுரம் பகுதியில் இருந்து நகரச் செயலாளர்கள், ஒன்றியசெயலாளர்கள்,சார்பு அணிநிர்வாகிகள்சார்பு அணிநிர்வாகிகள்உட்பட ஏராளமானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

Similar News