உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

மூலனூர் ஒழுங்குமுறை சந்தையில் ரூ.1.26 கோடிக்கு பருத்தி விற்பனை

Published On 2023-09-24 06:39 GMT   |   Update On 2023-09-24 06:39 GMT
  • இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
  • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா்.

மூலனூர்,செப்.24-

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 1.26 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.

கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 496 விவசாயிகள் 5,756 மூட்டைகளில் மொத்தம் 1,845 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். விலை குவிண்டால் ரூ. 6,450 முதல் ரூ. 7,472 வரை விற்பனையானது.

சராசரி விலை ரூ. 6,850. கடந்த வார சராசரி விலை ரூ. 6,800. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

Tags:    

Similar News