உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு

Published On 2023-03-18 05:26 GMT   |   Update On 2023-03-18 05:26 GMT
  • மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  • தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது.

திருப்பூர் :

தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம், திருப்பூர் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி அருள்அரசு கூறியதாவது :- திருப்பூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது. கடந்த, 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே 2023 - டிசம்பர் 2023 இரு பருவங்களில் சிறப்பு தேர்வு நடக்கிறது.இதில் மே மாதம் நடக்கவுள்ள சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.coe.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெறாத மாணவர்கள் வெற்றி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News