உள்ளூர் செய்திகள் (District)

புனித நீர் கோபுர கலசம் மேல் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்த காட்சி.

தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-04-06 11:01 GMT   |   Update On 2023-04-06 11:01 GMT
  • வேதிகார்ச்சனை, கோபூஜை ஆலயவிக்ரகங்களுக்கு காப்பு காட்டுதல் நடைபெற்றது.
  • அலங்கார பூஜை, தச தரிசனம் கோவிலில் நடைபெற்றது.

உடுமலை :

உடுமலையில் புகழ்பெற்ற பழமையான சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு மங்கள இசை, நான்காம் காலவேள்வி ஆரம்பம் ,வேதிகார்ச்சனை ,கோபூஜை ஆலயவிக்ரகங்களு க்கு காப்பு காட்டுதல் நடைபெ ற்றது. பின்னர் புண்ணிய தலங்களான ராமேஸ்வரம் ,கொடுமுடி ,பேரூர் ,திருமூர்த்தி மலை ,பழனி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மேல் ஊற்றபட்ட பின் சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார பூஜை ,தச தரிசனம் கோவிலில் நடைபெற்றது.

கும்பாபி ஷேக விழாவையொட்டி சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். உடுமலை டிஎஸ்பி., தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News