உள்ளூர் செய்திகள்

சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி. 

கணபதிபாளையம் ஊராட்சியில் தார்சாலை மேம்படுத்தும் பணி தொடக்கம்

Published On 2023-03-26 04:42 GMT   |   Update On 2023-03-26 04:42 GMT
  • மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் கணபதிபாளையம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31.35 லட்சம் மதிப்பீட்டில் மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், நிர்மலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News