உள்ளூர் செய்திகள்

மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் காட்சி.

உடுமலையில் கோழி தீவன அலுவலகத்தில் திருட்டு

Published On 2023-04-20 04:15 GMT   |   Update On 2023-04-20 04:15 GMT
  • கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடிச் சென்றது தெரிய வந்தது.
  • உடுமலை போலீசில் புகார் செய்தார்.

உடுமலை :

உடுமலையைச் சேர்ந்தவர் பொன்கார்த்திகேயன் (வயது 38). இவர் கோழி தீவனம் விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு உண்டான கணக்குகளை பார்ப்பதற்கு ஏதுவாக வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அலுவலகம் வைத்து உள்ளார். இந்த சூழலில் நேற்று அவர் அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு வெளியில் சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் அலுவலகத்திற்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு வைத்திருந்த செல்போனை காணவில்லை.

அதைத்தொடர்ந்து அலுவலகத்தில் மாட்டியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பொன் கார்த்திகேயன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் அலுவலகத்தில் நுழைந்து செல்போனை திருடிச் சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News