டேக்வாண்டோ போட்டியில் திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
- திருப்பூர் டேக்வாண்டோ சங்கம் நடத்திய 8-வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் எம்.என்.சி. பள்ளியில் நடைபெற்றது.
- தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் டேக்வாண்டோ சங்கம் நடத்திய 8-வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் எம்.என்.சி. பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் அங்கேரிப்பாளையம் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவர்கள் கவின், சங்கரன், ஹரிணி ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர். மாணவர்கள் ஹரீஸ், சந்தோஷ், ஹரிஸ், தமீம் ஹமீது அன்சாரி ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர். மாணவர்கள் கார்த்திக்கேயன், அர்பித், பூமேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி, உப தலைவர்க்ள முருகசாமி, டிக்சன், குப்புசாமி, செயலாளர் கீதாஞ்சலி, கோவிந்தப்பன், பொருளாளர் கந்தசாமி, இணை செயலாளர் துரைசாமி, பள்ளி முதல்வர் சுமதி, துணை முதல்வர் விஜயா ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.