உள்ளூர் செய்திகள் (District)
தீபாவளி கூட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிய திருப்பூர்
- ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
- சாலையோரங்களில் கடை அமைத்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.இதனால் திருப்பூரில் முக்கிய சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் திருப்பூர் மாநகரில் காதர்பேட்டை, மத்திய பேருந்து நிலையம், மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடை அமைத்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளான காதர் பேட்டை, குமரன் சாலை,மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் கூடுதலாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.