உள்ளூர் செய்திகள் (District)
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- 7மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது.
- திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி, தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 25). இவருக்கு கடந்த, 7மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது.இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் கணவன் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இதனையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வந்தனர். இருந்த போதிலும் அவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.