உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-09-07 05:25 GMT   |   Update On 2022-09-07 05:25 GMT
  • சில வருடங்களாக வாலிபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
  • வாலிபரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நாகராஜ்(வயது 30).இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாயார் மயிலாத்தாள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News