உள்ளூர் செய்திகள் (District)
கண்ணமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- காலை 9 மணி முதல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
- செயற்பொறியாளர் தகவல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சந்தவாசல், கண்ணமங்கலம், படவேடு, கேளூர், ஆத்துவாம்பாடி, ஏரிக்குப்பம், களம்பூர், வடமாதிமங்கலம், அய்யம்பேட்டை, சீனிவாசபுரம், கன்னிகாபுரம், முக்குறும்பை, பாலம்பாக்கம், கஸ்தம்பாடி, படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், ஒண்ணுபுரம், வண்ணாங்குளம், மேல்நகர், கொளத்தூர், குப்பம், வாழியூர், காளசமுத்திரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் காலை 9மணி முதல் பகல் 2 மணி வரை நிறுத்தப்படும் என ஆரணி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.