உள்ளூர் செய்திகள்
- மூலவர்களுக்கு மகா தீபாராதணை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
செங்கம்:
செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஷ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
ரிஷபேஷ்வரர், முருகன் வள்ளி, தெய்வானை சன்னதிகளில் உள்ள மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதணை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.