உள்ளூர் செய்திகள்
- ராமநாதீஸ்வரர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு (சோமவார பிரதோஷம்) நடைபெற்றது.
தொடர்ந்து பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது.பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரம் முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மேலும் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தவாசல் சுந்தரேஸ்வரர் சமேத வடிவாம்பிகை கோவிலில் நேற்று சோமவார சங்காபிஷேக பூஜையும், மாலையில் பிரதோஷ வழிபாடும் நடைபெற்றது.