உள்ளூர் செய்திகள்
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- பைக் பறிமுதல்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அப்துல் வாஹித் (வயது 36). இவர் சேத்துப்பட்டில் மோட்டார் சைக் கிளை நிறுத்திவிட்டு பொருட் கள் வாங்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடியவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவண் ணாமலை-செஞ்சி செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சேத்துப்பட்டு இருதய ஆண்ட வர் தெருவை சேர்ந்த வாசன் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பைக் திருடியதை ஒப்புகொண்டார். இதையடுத்து அவரை போலீ சார் கைது செய்து, மோட் டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.