உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது.

புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

Published On 2023-04-15 09:36 GMT   |   Update On 2023-04-15 09:36 GMT
  • போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டியுடன் வந்தார்.
  • . அவரை அழைத்து சோதனை செய்தபோது அந்த அட்டை பெட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை இருப்பது தெரிய வந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் தலைமையிலான் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டியுடன் வந்தார். அவரை அழைத்து சோதனை செய்தபோது அந்த அட்டை பெட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அந்த வாலிபர் விழுப்புரத்தை சேர்ந்த சங்கர் (வயது 36) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News