உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மழையிலும் குடை பிடித்தபடி மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-18 09:19 GMT   |   Update On 2023-05-18 09:19 GMT
  • 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது
  • மலர் செடி கொடிகளை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

ஊட்டி

கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் நாள்தோறும் அண்டைய மாநிலமான கேரளா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.

கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சில நாட்களாக மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று மதியத்துக்கு மேல் ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சூடு தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இரவில் கூட வெப்பம் தணிந்து முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது

சுற்றுலா பயணிகள் இதனை அனுபவித்து வருகின்றனர் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடியே ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றி வருகின்றனர். பசுமையான புல்வெளிகளும் மருத்துவம் நிறைந்த மலர் செடி கொடிகளையும் குளிர்ச்சியான காற்றுடன் சேர்ந்து ஒரு குடைகளைப் பிடித்த படியே பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

Tags:    

Similar News