உள்ளூர் செய்திகள் (District)

முத்தையாபுரம் தோப்பு தெரு வளைவு பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் காத்திருப்பதை படத்தில் காணலாம்.

லாரி செட்டுகளால் போக்குவரத்து நெருக்கடி; தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-11-26 08:13 GMT   |   Update On 2022-11-26 08:13 GMT
  • முத்தையாபுரம் தோப்பு தெரு வளைவில் நீண்ட நேரமாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் சாலை ஓரங்களில் லாரி செட்டுகளும், தடி யார்டுகளும் அதிக அளவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி

இதனால் அங்கு வரும் அதிக பாரம் ஏற்றும் ட்ரெய்லர் மற்றும் டாரஸ் லாரிகளும் பிரதான சாலைகளில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும், தொடர் விபத்துகளும் நடந்து வருகிறது.

முத்தையாபுரம் தோப்பு தெரு வளைவில் இருக்கும் லாரி செட்டில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் ட்ரெய்லர் லாரிகளால் திருச்செந்தூர் பிரதான சாலையில் நீண்ட நேரமாக பஸ்களும், மற்ற வாகனங்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News