'சீல்' வைக்கப்பட்ட ஆலையை திறந்து இயக்கிய உரிமையாளர் மீது வழக்கு
- அனுமதி இல்லாமல் இயங்கியது தொடர்பாக சீல் வைக்கப்பட்டது
- ஜவ்வரிசி ஆலை இயங்குவது தொடர்பாக விசாரணை
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம் உப்பி–லியபுரம் அருகே உள்ள டி.முருங்கபட்டி ஆத்தூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி முத்துச் செல்வி (வயது 52). இவர் டி.முருகப்பட்டி பகுதியில் ஜவ்வரிசி தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.இந்த தொழிற்சாலை அரசின் உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கண்டு–பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜன–வரி 25-ந்தேதி அந்த தொழிற்சாலைக்கு அதிகா–ரிகள் சீல் வைத்தனர்.இதற்கிடையே சீல் வைக் கப்பட்ட அந்த ஆலை இயங்கி வருவதாக வாட்ஸ்அப் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே உப்பிலியபுரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அப்போது சீல் வைக்கப்பட்ட அந்த தொழிற்சாலை மீண்டும் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து முத்துச் செல்வி மீது உப்பிலியபுரம் போலீசார் மூன்று பிரிவு–களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீல் வைக்கப்பட்ட ஆலையை தடை உத்தரவை மீறி மீண் டும் இயக்கிய சம்ப–வம் அந்தப் பகுதியில் பரப–ரப்பை ஏற்படுத்தி உள்ளது.