உள்ளூர் செய்திகள்

நெல்லுக்கான விலை அதிகரிப்பு போதாது - பூ.விஸ்வநாதன் அறிக்கை

Published On 2022-09-01 09:25 GMT   |   Update On 2022-09-01 09:25 GMT
  • தமிழக அரசு 2022-23 ம் ஆண்டுக்கான நெல்லுக்கான ஊக்க தொகையாக சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75 ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100 ம் ஊக்க தொகையாக அறிவித்துள்ளது.
  • போதுமான விலை அறிவிக்காததால் தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

திருச்சி,

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தமிழக அரசு 2022-23 ம் ஆண்டுக்கான நெல்லுக்கான ஊக்க தொகையாக சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75 ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100 ம் ஊக்க தொகையாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 விலை அறிவித்துள்ளது. போதுமான விலை அறிவிக்காததால் தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 விலை உயர்த்தி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது. கடைசியில் விவசாயிகளுக்கு சொற்ப தொகை கிடைப்பதே சவாலாக இருக்கிறது. ஆகவே தேர்தல் வாக்குறுதிபடி நெல்லின் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News