விமான நிலையத்தில் மீண்டும் கடத்தல் தங்கம்
- விமான நிலையத்தில் மீண்டும் கடத்தல் தங்கம் சிக்கியது
- 2 பேரிடம் விசாரணை
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் அதிகாரிகள் அதிகம் கவனம் செலுத்தி வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சநதேகத்துக்குரிய முறையில் இருந்த 2 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். இதில் அவர்கள் சுமார் 50 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கம் எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே விமானத்தில் நேற்று வந்ததிருப்பூரை சேர்ந்த உஷா மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இக்பால் அப்துல் அஜீஸ் ஆகிய இருவரும் கடத்தி வந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.