உள்ளூர் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு தி.மு.க. துணை நிற்கும்-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

Published On 2023-05-05 08:00 GMT   |   Update On 2023-05-05 08:00 GMT
  • கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு தி.மு.க. துணை நிற்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்
  • கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார்

திருச்சி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் பா.ஜ.க.வை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உறையூர் குறத்தெருவில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இதனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்கு நடைபெ்றற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் சுரேஷ் முத்துசாமி, முருகன், பார்வதி, அஞ்சுகம். சையது அபுதாகிர், ராஜா, ராஜலிங்கம், அண்ணாதுரை. திராவிட மணி. இப்ராஹிம், முத்துலட்சுமி, கருணாகரன், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர், கவுன்சிலர் பைஸ் அகமது, விடுதலை சிறுத்தை கட்சி அருள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஹபிபுர் ரஹ்மான், சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் ஞானதேசிகன், தி.க. மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், சி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம், செல்வகுமார், சிவசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மேற்கு பகுதி துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், பகுதி செயலாளர்கள் நாகராஜன், இளங்கோ, தில்லைநகர் கண்ணன், காங்கிரஸ் எத்திராஜ், ம.தி.மு.க., பெல் ராஜமாணிக்கம், ஆசிரியர் முருகன், கோபாலகிருஷ்ணன், ம.ம.க. இப்ராஹிம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாற்றத்தை நோக்கி என்ற புத்தகத்தை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

அதனை முத்தரசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-கம்யூனிஸ்ட் கட்சிகள் தைரியமாக பா.ஜ.க.வை அகற்றுவோம் என்று எதிர்த்து வருகிறது. இதற்கு தி.மு.க.வும் முழு ஆதரவை தரும். மேற்கு தொகுதியில் ஆறு நாட்கள் நடை பயணமாக சென்று மக்கள் மத்தியில் இயக்கத்தை நடத்துகிறார்கள். இதில் எங்கள் கட்சியினர் உறுதுணையாக இருப்பார்கள். இது பயணம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். சமதர்ம சமுதாயம் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே திராவிடமாடல் ஆட்சியின் நோக்கம். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய இந்த நடைபயண இயக்கத்திற்கு தி.மு.க. துணை நிற்கும்.இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Tags:    

Similar News