உள்ளூர் செய்திகள் (District)

காருக்குள் பிணமாக கிடந்த டிரைவர்

Published On 2023-09-12 09:04 GMT   |   Update On 2023-09-12 09:06 GMT
  • திருச்சி மேலபுதூரில் காருக்குள் டிரைவர் பிணமாக கிடந்தார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி, 

திருச்சி பாலக்கரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் வாழவந்தான் கோட்டையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது காருக்கு திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ராஜா என்கிற எட்வர்டு ஆரோக்கியராஜ் என்பவர் ஆக்டிங் டிரைவர் ஆக இருந்து வந்தார் .சம்பவத்தன்று இவரது காரை எடுத்துக்கொண்டு திருச்சி மேலப்புதூர் பகுதி யில் உள்ள பள்ளி அருகில் நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் காருக்குள் இருந்த ராஜா என்கிற எட்வ ர்டு ஆரோக்கியராஜ் மயங்கி ய நிலையில் பிணமானார்.இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News