உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்த பதட்டத்தில் ஓடிய விவசாயி பரிதாப சாவு

Published On 2023-04-14 07:22 GMT   |   Update On 2023-04-14 07:22 GMT
  • பாம்பு கடித்த பதட்டத்தில் ஓடிய விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்
  • தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டது

திருச்சி:

முசிறி அருகே உள்ள மாவலிபட்டி மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவர் வழக்கம் போல் அங்குள்ள தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது காலில் பாம்பு கடித்து விட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் பதட்டத்தில் அங்கிருந்து வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார்.

இதில் சற்று தூரத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் கிருஷ்ண மூர்த்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்க்க ப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதுகுறித்து ஜம்புராதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தரப்பில் கூறும் போது, பாம்பு கடித்த உடன் வேகமாக ஓடிய காரணத்தால் விஷம் உடல் முழுவதும் பரவி விட்டது. இதற்கிடையே கீழே விழுந்ததில் மூளை வரை விஷம் ஏறி காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News