உள்ளூர் செய்திகள் (District)

7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

Published On 2023-05-07 06:40 GMT   |   Update On 2023-05-07 06:40 GMT
  • மாட்டு கொட்டகையில் புகுந்த 7 அடி நீள பாம்பு
  • வனத்துறையில நாகலாபுரம் காப்புக்காட்டில் விட்டனர்

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கேசவன் என்பவருக்கு துறையூர் - ஆத்தூர் செல்லும் சாலையில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த உதயசூரியன் என்பவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக உதயசூரியன் மாட்டு கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இது பற்றி துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர், சதீஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, லாவகமாக பாம்பை பிடித்து துறையூர் வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அலுவலர்கள் பாம்பை நாகலாபுரம் காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

Tags:    

Similar News