உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்றவர் கைது

Published On 2022-09-14 10:31 GMT   |   Update On 2022-09-14 10:31 GMT
  • கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
  • 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி:

திருச்சி குழுமிக்கரை கல்லாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையான போலீசார் கல்லாங்காடு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 26), கோபி ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரைகைது செய்தனர். தப்பி ஓடிய கோபியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News