உள்ளூர் செய்திகள்

திருச்சி லாட்ஜில் பிணமாக கிடந்த கேரள வியாபாரி

Published On 2022-10-29 10:04 GMT   |   Update On 2022-10-29 10:04 GMT
  • கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரி
  • சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருச்சி,

கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரியான இவர் அவ்வப்போது திருச்சிக்கு வந்து செல்வார். கடந்த 17ம் தேதி கேரளாவில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்தவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களாக அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சப்- இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் பாபு பணமாக கிடந்தார்.

அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் போலீசார் நடத்திய சோதனையில் அதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றதற்கான சீட்டு மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆகவே உடல் நலக்குறைவால் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விடுதி அருகில் வியாபாரி பிணமாக கிடந்த சம்பவம் அந்த விடுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News