அம்பிகாபுரம், திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மின்தடை
- அம்பிகாபுரம், திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யபடுகிறது
- காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திருச்சி
அம்பிகாபுரம், திருவெறும்பூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், இராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலகல்கண்டார்க்கோட்டை, கீழகல்கண்டார்க்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டபட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிபட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் மற்றும் திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருவெறும்பூர், பத்தாளபேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணா நகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமா நகர், பிரகாஷ் நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத் நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.