உள்ளூர் செய்திகள்

தா.பேட்டை பகுதியில் சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2022-08-10 08:52 GMT   |   Update On 2022-08-10 08:52 GMT
  • சிவாலயத்தில் நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.
  • தா.பேட்டை காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர ஸ்தலமானகைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கை பாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடை பெற்றது.

திருச்சி :

தா.பேட்டையில் காசி விசாலாட்சிசமேத காசிவிஸ்வநாதர் சிவாலயத்தில் நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதே போன்று தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர ஸ்தலமானகைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கை பாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடை பெற்றது.

Tags:    

Similar News