உள்ளூர் செய்திகள்

சபரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-08-02 07:44 GMT   |   Update On 2022-08-02 07:44 GMT
  • சபரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்துள்ளது
  • மாநில அளவிலான மல்லர் கம்பப்போட்டி:

திருச்சி:

விழுப்புரத்தில் ஆறாவது மாநில அளவிலான மல்லர் கம்ப போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட மல்லர் கம்ப கழகம் மற்றும் தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றனர்.

30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு மல்லர் கம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த மாநில அளவிலான போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட அணி பல்வேறு பதக்கங்களை வென்று மீண்டும் மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. தமிழரின் பாரம்பரிய விளையாட்டை முன்னெடுத்து பல சாதனைகளை புரிந்து வரும் தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

மாநில அளவிலான மல்லர் கம்ப போட்டியில் பரிசு வென்ற திருச்சி மாவட்ட மல்லர் கம்ப அணியினர் முசிறி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றனர். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் விளையாட்டு ஆசிரியர் மற்றும் திருச்சி மாவட்டம் மலர் கம்பக் கழகத்தின் தலைவர் பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News