- 6 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- விசாரணை மற்றும் தண்டனை காலதத்துக்குப் பின்னர் அவரவர் தாயகம் அனுப்பி வைப்பது வழக்கம்.
திருச்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், இலங்கை, மியான்மர், பல்கேரியா, உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், பயண ஆவணங்கள் தொடர்புடைய பல்வேறு வழக்குகள் தொடர்பாக, விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை மற்றும் தண்டனை காலதத்துக்குப் பின்னர் அவரவர் தாயகம் அனுப்பி வைப்பது வழக்கம்.
அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த வர்ஷானன், பாய்வா ரீகன், ராஜெம்ட்ராம், உதயகுமார், அருள் வசந்தன், அருண் குரூஸ் உள்ளிட்ட 7 பேரை தாயகம் அனுப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் தற்போது தாயகம் செல்ல விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து மற்ற 6 பேரும் இலங்கை செல்லும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர்