உள்ளூர் செய்திகள் (District)

வியாபாரி வீட்டில் நகைகள் திருட்டு

Published On 2023-03-07 08:28 GMT   |   Update On 2023-03-07 08:28 GMT
  • வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தவருக்கு அதிர்ச்சி
  • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

திருச்சி.

பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் கார்த்திக் ( வயது 27). இவர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை பார்த்த மர்ம நபர், வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார். இது குறித்து கார்த்திக் செசன்ஸ்கோர்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News