உள்ளூர் செய்திகள் (District)

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

Published On 2023-04-07 08:24 GMT   |   Update On 2023-04-07 08:24 GMT
  • உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது
  • வருகிற 14-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது

திருச்சி:

தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக் கம்.அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை–யொட்டி நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபா–டும், வாஸ்து சாந்தி–யும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மேல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. மேலும், 13-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாக–னம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் ஆகிய–வற்றில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள் ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முத்துப் பல்லக்கில் வீதி உலா 10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேட–யத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடை–யாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.விழாவுக்கான ஏற்பாடு–களை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணை–யர் ஞான–சேகரன் மற்றும் கோவில் பணியா–ளர்கள் செய்து வருகிறார்கள்.


Tags:    

Similar News