உள்ளூர் செய்திகள் (District)
மாநகராட்சி தூய்மை பணியாளர் ஆசிட் குடித்து சாவு
- அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
- மாநகராட்சி தூய்மை பணியாளர் ஆசிட் குடித்து உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி கல்லுக்குழி 1-வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 49). திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விரக்தி அடைந்த சிவலிங்கம் வீட்டு பாத்ரூமுக்கு வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார்.உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிவலிங்கம் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .