உள்ளூர் செய்திகள் (District)

திருச்சியில் 21 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2022-11-14 09:17 GMT   |   Update On 2022-11-14 09:17 GMT
  • சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை இட்டனர்.
  • அப்போது மர்ம நபர் ஒரு பையில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி ராம்ஜி நகர் போலீசார் நவலூர் குட்டப்பட்டு தேசிய சட்டக் கல்லூரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை இட்டனர்.

இதில் அந்த நபர் ஒரு பையில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற மதுபாலன் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.

சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்கு அந்த கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக ராம்ஜி நகர் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News