உள்ளூர் செய்திகள் (District)

கூடுதல் வட்டி தொகை தருவதாக பல லட்சம் மோசடி

Published On 2023-04-01 09:01 GMT   |   Update On 2023-04-01 09:01 GMT
  • தங்கத்தின் மீது வெளிநாடுகளில் முதலீடு செய்தால் அதிக பணம் என்று மோசடி
  • 5பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ரத்தனகிரி, இவரது மனைவி லதா (வயது 36.)இவரிடம் சேலத்தில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் திருச்சி கிளை அலுவலர்கள் தொடர்பு கொண்டு பேசினர் . அப்போது வெளிநாடுகளில் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட பணம் கூடுதலாக மாதந்தோறும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறினர்.இதனை நம்பிய அவர் சில லட்சங்களை முதலீடு செய்தார். மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சொல்லி அவர்களும் ரூ 26 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.மேலும் ஒரு லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ 18 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.பின்னர் அந்த நிறுவனத்தார் ரூ 4 லட்சத்து 66 ஆயிரம் பணத்தை வழங்கிவிட்டு மீதி பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்தனர். இந்த நிலையில் நீண்ட காலமாகியும் முதலீடு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதை தொடர்ந்து திருச்சி ஜே எம் 1நீதிமன்றத்தில் லதா வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் தனியார் கம்பெனியின் நிர்வாக இயக்குனர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News