மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன் மனைவி பலி
- நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது
- பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கபிலன் (வயது38). இவரது மனைவி அமுதா (29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கபிலன் தனது மனைவி அமுதாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கி கணவர் கண்முன் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கபிலன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.