உள்ளூர் செய்திகள்

போலீசார் பறிமுதல் செய்த நகைகள், அமெரிக்க டாலர்கள் மற்றும் கைதானவர்கள்.

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

Published On 2022-09-08 09:16 GMT   |   Update On 2022-09-08 09:16 GMT
  • நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்களை கொள்ளையடித்தனர்.
  • போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை சிவன் வடக்கு வீதியை சேர்ந்த சாகுல் அமீது, ஜின்னா, தேத்தாகுடி பகுதியை சேர்ந்த முருகானந்தம், நீர் மூளையை சேர்ந்த கலைமணி ஆகியோரின் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில், தோப்புத்துறை சோதனை ச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அந்த காரில் 20 பவுன் நகை மற்றும் 2 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த காரில் இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் மற்றும் திருவாரூரை சேர்ந்த குரு சக்தி ஆகியோரிடம் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக வேதாரண்யம் பகுதியில் நடந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News