உள்ளூர் செய்திகள்

காடாம்புலியூரில் அனுமதி இன்றி கள் இறக்கியவர் கைது

Published On 2023-04-02 07:53 GMT   |   Update On 2023-04-02 07:53 GMT
  • காடாம்புலியூரில் அனுமதி இன்றி கள் இறக்கியவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் வேலன் குப்பம் பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த விக்ரம் (22) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக விக்ரமை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News