உள்ளூர் செய்திகள்

கடையத்தில் அனுமதி இல்லாமல் 'அண்டர்கிரவுண்ட்' கட்டிடம் கட்டப்பட்டதா?விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-06-11 08:42 GMT   |   Update On 2023-06-11 08:42 GMT
  • பாரதி நினைவு நகர் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் ‘அண்டர்கிரவுண்ட்’ கட்டிடம் கட்டப்பட்டதாக தெரிகிறது.
  • அண்டர்கிரவுண்ட் கட்டிடத்தால் அருகே உள்ள வீடுகள், மருத்துவமனைக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

கடையம்:

முதல் -அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடையம் பகுதி பொதுமக்கள் சார்பாக அனுப்பபட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடையம்-தென்காசி சாலையில் மருத்துவமனை அருகே சேர்வைகாரன்பட்டி ஊராட்சி பாரதி நினைவு நகர் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் 'அண்டர்கிரவுண்ட்' கட்டிடம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த கட்டிடத்தால், மழை பெய்யும் நாட்களில் அருகே உள்ள குளத்தில் மழைநீர் தேங்கும் போது கட்டிடத்தின் அண்டர் கிரவுண்ட் பகுதியில் நீர் கசிந்து மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அருகே உள்ள வீடுகள் மற்றும் மருத்துவமனை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News